VIZHAYAADDU PAADALGAL (GAME SONGS)
விளையாட்டுப் பாடல்கள்
From children to younger, they spent their free times in games in those days. But now more times is spent in front of the TV. Due to this, this generation peoples don’t have chances to know the ancient Tamil games & related songs.
The games related songs have different style & beat. It depends on village environment, people’s culture and sex.
01. கொம்பு விளையாட்டுப் பாடல்கள் (KOMBU VIZHAYADDU PADALGAL)
This song is one of the famous songs in Batticaloa. Even, now a day this song is hidden, we can notify, it has been played in some areas. At those days, it kept as oral songs, but now there are lot of peoples has kept these songs as written form under the category of folk songs collections. These songs were sung, when they divide in two parties at the game and when they celebrate theirs victory. These songs normally mean, wish the one party and blame the opposite party.
வடசேரியான் கொம்பு எங்கே எங்கே
மணமுள்ள தாழையின் மேலே மேலே
தென்சேரியான் கொம்பு எங்கே எங்கே
செம்பரப் பற்றைக்கு உள்ளே உள்ளே
தென்சேரியான் கொம்பு எங்கே எங்கே
சித்திரத் தேருக்கு மேலே மேலே
வடசேரியான் கொம்பு எங்கே எங்கே
வண்ணாடை சாடிக்கு உள்ளே உள்ளே
These songs can be notify follows, which sings as love song type, while imagine the north parties as gent and south parties as lady. Normally it means, the north party gent goes towards the south party lady & says his love, and she says her disagreement as indirectly.
SONG:-01
பால்போல் நிலவெறிக்கப்
படலை திறந்தவன் ஆர்தோழி
நான் தாண்டி வடசேரியான் – உனக்கு
நாழிப்பணம் கொண்டுலாவுகிறேன்.
மானே மரகதமே மாணிக்கமே
புவி ஆணிமுத்தே
தேனே திரவியமே எந்தன்
செம்பொன் மோதிரத்தை நான் தாறேன்.
மோதிரத்தின்மேல் ஆசையில்லை
உன்முகத்தைப் பார்க்கவும் நேரமில்லை
பெண்பாசம் என்மேல் கொள்ளாதேயடா
பண்புகெட்ட வடசேரியான்.
SONG:-02
கோலப் பனிச்சேலை கொய்துடுத்துக்
கொம்பு விளையாட்டுக்குப் போகையிலே
வேலப்பா வந்து மடிபிடித்து
மெத்தவும் சிக்கிக் கொண்டார் தோழி.
காப்பணி மங்கையர் மன்மத வேள்
கந்தன் குமரன் அருள்வேலன்
சீப்புடன் மல்லிகைப் பூமாலை தந்து
சேர்வ மென்றாரடி தோழியரே.
02. கிட்டிப் புள் பாடல்கள் (KIDDI PUZH PAADALGAL)
“KIDDI PUZH” is one of the ancient games, which were played in Jaffna villages. This game is still played by children. It is played by using one small stick & one large stick. In here the song is used to manage the breath. When they play, they are running while pronounce every last word of the song until the breath. Another one player runs side of the player to notice the breath break. This song also contains some indirect & bad words to divert the player’s concentration, who notices the breath.
கவடியடிக்கக் கவடியடிக்கக்
கைகால் முறியக் கைகால் முறியக்
காலுக்கு மருந்து தேடிக்கட்டு தேடிக்கட்டு
மாம்பட்டை மருதம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
பூம்பட்டை புளியம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்….
பாக்குப் புழுத்தால் பதினாறோலை
மூங்கிலோலை முதிரப்பட்டு
வீரவாகு பட்டணம் பட்டணம்….
ஆலையிலே சோலையிலே
ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிறுகடிக்கப் பாலாறு
பாலாறு பாலாறு பாலாறு
ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கி இறுக்கிக் கட்டு
ஈச்சாலை தும்போலை
பாக்குப் படிச்ச வண்ணான் ஓலை
மூங்கிலோலை முதிரைக்குட்டி
சின்னவாளி பட்டணம் பட்டணம்….
கவடிக் கவடிக் கொட்டை
கம்பளி வீரக்கொட்டை
பறைப்பயல் இலுப்பைக் கொட்டை
பாடிவா தும்புக்கட்டை தும்புக்கட்டை….
கீழாறோலை மேலாறோலை
எண்ணிப் பார்த்தால் பதினாறோலை
கிட்டிப் புள்ளும் பம்பரம்
கிறுகடிக்கப் பாலாறு பாலாறு….
ஆலஞ்சருகு மடமடன்ன்
ஆங்கோர் வண்டி உருண்டுவர
சோலைக் கிளியார் கொத்தியடிக்க
நாய் குலைக்க நல்லாண்டம்மா
பையோடா பையோடா….
நத்தை சூரி புல்லுத்தின்ன
நறுவிலி சங்கிலி பாராயோ
காரா வென்கிற பசுவைக் கண்டால்
கடைக்கண்ணாலே பாராயோ
பாராயோ பாராயோ….
கண்ணாம் பொத்தி கடகட மார்
மூன்று விளாச்சி மூக்கறை பொத்தி
பாலையுஞ் சோறையுங் கொண்டுவா
கொண்டு வா கொண்டு வா….
ஈச்சத மன்னார் இசைசரு மன்னார்
ஈச்சம் பழந்தின்ன வந்தீரோ மன்னார்
எங்கடை மச்சான் எங்கடைமச்சான்….
ஆலஞ்ச நகு மடமட வெனவே
அங்கொரு வண்டிலுருண்டு வரக்
காலடி வரப் பொழுதேறிவரத்
தொந்தட்ட தொந்தட்ட
தெருவெங்கும் பொறித்தட்ட
பூம்பட்டை புளியம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
கவடிக் கவடிக் கவடிக்….
03.AAKKADDI PAADAL - ஆக்காட்டிப் பாடல்
ஆக்காட்டி ஆக்காட்டி
ஆவரம்பூ ஆக்காட்டி
எங்கே எங்கே முட்டையிட்டாய்.
கல்லுத் துளைத்து கடலோரம் முட்டையிட்டன்
இட்டது நாலுமுட்டை பொரித்தது மூணுகுஞ்சு
மூத்த குஞ்சுக்கிரைதேடி ஏழுமலை சுத்திவந்தேன்
பாத்திருந்த குஞ்சுக்கு பவளமலை சுத்தி வந்தேன்.
புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகையிலே
மாயக்குறத்தி மகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்
காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க
நானழுதகண்ணீரும் என்குஞ்சழுத கண்ணீரும்
வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கா; கால்கழுவி
குண்டு நிறைந்து குதிரை குளிப்பாட்டி
இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி
மஞ்சலுக்குப் பாய்ஞ்சு மறித்து தாம் கண்ணீரோ.
04.OONJAT PAADAL - ஊஞ்சற் பாடல்
தந்தான தனாதன தனாதன தனானே
தானா தானாதந்த னாதந்த னானே
வாருமடி தோழியரே நாங்களிரு பேரும்
வந்த சிவராத்திரியை சிந்தையுடன் நோற்போம்
கடற்கரையில் மணற்பரவி நடக்க முடியாது
கானலிலும் வெயிலிலும் ஒட முடியாது
கஞ்சாற் புளியிலே ஊஞ்சாலுங் கட்டி
கனகனா தெருவிலே கூத்துமென்றாடி
காவோலை சரசரக்க வண்டென் றிருந்தேன்
காக்கொத்து மச்சாளைப் பெண்டென் றிருந்தேன்
ஓடோடு புளியம்பழம் உடைந்துடைந்து விழுவானேன்
ஒரு கிண்ணச் சந்தனம் ஒழுகொழுகப் பூசுவானேன்
கண்டபிணி கொண்டவலி கால்மாறி ஓட
கண்ட சிவராத்திரியை காதலுடன் நோற்பாய்
ஏறுமயி லேறிவிளை யாடிமலை தோழி
இரணியனைக் கொன்றமலை nதரியுதடி தோழி
வுளையாட வெகுதுயரம் வருகுதடி தோழி
மெதுவாக ஊஞ்சலைத் தணியுமடி தோழி
05.KOLAADDAM – கோலாட்டம்
தினதந்தினா தினதந்தினா
தினதந்தினா தினனா
தினதந்தினா தினனா
தின்னா தினா தந்தினா
தின தந்தினா தினனா
பன்னிரண்டு கயிர்போட்டு
பள்ளிப் பிள்ளையாட
பள்ளிப் பிள்ளையா
பாங்கான பாடல்களும்
பக்கத்திலே பாட
ஆண் பிள்ளையும் பெண்பிள்ளையும்
அருகில் நின்று பார்க்க
அருகில் நின்று பார்க்க
சிவன் என்று சொல்லி
அனைவருமே சொல்வார்.
பூமணக்கும் பெண்மணிகள்
போற்றி வந்து சூழ
போற்றி வந்து சூழ
பொன்னொழுக நன்னயத்தில்
நன்னயமா தாயே.
06.KUMMI – கும்மி
தன்னானே நாதினம் தன்னானே – தன
தன்னை நாதினம் தன்னானே.
தன்னானே என்றுமே சொல்லுங்கடி – ஒங்க
நாவுக்கு சக்கரை நான் தாரேன்
தில்லாலே என்றுமே சொல்லுங்கடி
திங்கச் சக்கரை நான் தாரேன்.
கடகடன்னு மழை பேய
கம்பிள தண்ணி அலைமோத
காரியகாரராம் நம்மய்யா கங்காணி
கடுக்கன் மின்னலைப் பாருங்கடி.
குதிர வாரதப் பாருங்கடி – ஐயா
குவிஞ்சு வாரதப் பாருங்கடி
குதிரமேல நம்மய்யா கங்காணி
குனிஞ்சு சம்பளம் கேளுங்கடி.
நன்னயமாகவே கொண்டை கட்டி
நாகூறு லேஞ்சி மேலேகட்டி
கண்ணியமாகவே வாராரு – ஐயா
காசு பணமள்ளித் தருவாரு.
விளையாட்டுப் பாடல்கள்
From children to younger, they spent their free times in games in those days. But now more times is spent in front of the TV. Due to this, this generation peoples don’t have chances to know the ancient Tamil games & related songs.
The games related songs have different style & beat. It depends on village environment, people’s culture and sex.
01. கொம்பு விளையாட்டுப் பாடல்கள் (KOMBU VIZHAYADDU PADALGAL)
This song is one of the famous songs in Batticaloa. Even, now a day this song is hidden, we can notify, it has been played in some areas. At those days, it kept as oral songs, but now there are lot of peoples has kept these songs as written form under the category of folk songs collections. These songs were sung, when they divide in two parties at the game and when they celebrate theirs victory. These songs normally mean, wish the one party and blame the opposite party.
வடசேரியான் கொம்பு எங்கே எங்கே
மணமுள்ள தாழையின் மேலே மேலே
தென்சேரியான் கொம்பு எங்கே எங்கே
செம்பரப் பற்றைக்கு உள்ளே உள்ளே
தென்சேரியான் கொம்பு எங்கே எங்கே
சித்திரத் தேருக்கு மேலே மேலே
வடசேரியான் கொம்பு எங்கே எங்கே
வண்ணாடை சாடிக்கு உள்ளே உள்ளே
These songs can be notify follows, which sings as love song type, while imagine the north parties as gent and south parties as lady. Normally it means, the north party gent goes towards the south party lady & says his love, and she says her disagreement as indirectly.
SONG:-01
பால்போல் நிலவெறிக்கப்
படலை திறந்தவன் ஆர்தோழி
நான் தாண்டி வடசேரியான் – உனக்கு
நாழிப்பணம் கொண்டுலாவுகிறேன்.
மானே மரகதமே மாணிக்கமே
புவி ஆணிமுத்தே
தேனே திரவியமே எந்தன்
செம்பொன் மோதிரத்தை நான் தாறேன்.
மோதிரத்தின்மேல் ஆசையில்லை
உன்முகத்தைப் பார்க்கவும் நேரமில்லை
பெண்பாசம் என்மேல் கொள்ளாதேயடா
பண்புகெட்ட வடசேரியான்.
SONG:-02
கோலப் பனிச்சேலை கொய்துடுத்துக்
கொம்பு விளையாட்டுக்குப் போகையிலே
வேலப்பா வந்து மடிபிடித்து
மெத்தவும் சிக்கிக் கொண்டார் தோழி.
காப்பணி மங்கையர் மன்மத வேள்
கந்தன் குமரன் அருள்வேலன்
சீப்புடன் மல்லிகைப் பூமாலை தந்து
சேர்வ மென்றாரடி தோழியரே.
02. கிட்டிப் புள் பாடல்கள் (KIDDI PUZH PAADALGAL)
“KIDDI PUZH” is one of the ancient games, which were played in Jaffna villages. This game is still played by children. It is played by using one small stick & one large stick. In here the song is used to manage the breath. When they play, they are running while pronounce every last word of the song until the breath. Another one player runs side of the player to notice the breath break. This song also contains some indirect & bad words to divert the player’s concentration, who notices the breath.
கவடியடிக்கக் கவடியடிக்கக்
கைகால் முறியக் கைகால் முறியக்
காலுக்கு மருந்து தேடிக்கட்டு தேடிக்கட்டு
மாம்பட்டை மருதம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
பூம்பட்டை புளியம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்….
பாக்குப் புழுத்தால் பதினாறோலை
மூங்கிலோலை முதிரப்பட்டு
வீரவாகு பட்டணம் பட்டணம்….
ஆலையிலே சோலையிலே
ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிறுகடிக்கப் பாலாறு
பாலாறு பாலாறு பாலாறு
ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கி இறுக்கிக் கட்டு
ஈச்சாலை தும்போலை
பாக்குப் படிச்ச வண்ணான் ஓலை
மூங்கிலோலை முதிரைக்குட்டி
சின்னவாளி பட்டணம் பட்டணம்….
கவடிக் கவடிக் கொட்டை
கம்பளி வீரக்கொட்டை
பறைப்பயல் இலுப்பைக் கொட்டை
பாடிவா தும்புக்கட்டை தும்புக்கட்டை….
கீழாறோலை மேலாறோலை
எண்ணிப் பார்த்தால் பதினாறோலை
கிட்டிப் புள்ளும் பம்பரம்
கிறுகடிக்கப் பாலாறு பாலாறு….
ஆலஞ்சருகு மடமடன்ன்
ஆங்கோர் வண்டி உருண்டுவர
சோலைக் கிளியார் கொத்தியடிக்க
நாய் குலைக்க நல்லாண்டம்மா
பையோடா பையோடா….
நத்தை சூரி புல்லுத்தின்ன
நறுவிலி சங்கிலி பாராயோ
காரா வென்கிற பசுவைக் கண்டால்
கடைக்கண்ணாலே பாராயோ
பாராயோ பாராயோ….
கண்ணாம் பொத்தி கடகட மார்
மூன்று விளாச்சி மூக்கறை பொத்தி
பாலையுஞ் சோறையுங் கொண்டுவா
கொண்டு வா கொண்டு வா….
ஈச்சத மன்னார் இசைசரு மன்னார்
ஈச்சம் பழந்தின்ன வந்தீரோ மன்னார்
எங்கடை மச்சான் எங்கடைமச்சான்….
ஆலஞ்ச நகு மடமட வெனவே
அங்கொரு வண்டிலுருண்டு வரக்
காலடி வரப் பொழுதேறிவரத்
தொந்தட்ட தொந்தட்ட
தெருவெங்கும் பொறித்தட்ட
பூம்பட்டை புளியம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
கவடிக் கவடிக் கவடிக்….
03.AAKKADDI PAADAL - ஆக்காட்டிப் பாடல்
ஆக்காட்டி ஆக்காட்டி
ஆவரம்பூ ஆக்காட்டி
எங்கே எங்கே முட்டையிட்டாய்.
கல்லுத் துளைத்து கடலோரம் முட்டையிட்டன்
இட்டது நாலுமுட்டை பொரித்தது மூணுகுஞ்சு
மூத்த குஞ்சுக்கிரைதேடி ஏழுமலை சுத்திவந்தேன்
பாத்திருந்த குஞ்சுக்கு பவளமலை சுத்தி வந்தேன்.
புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகையிலே
மாயக்குறத்தி மகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்
காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க
நானழுதகண்ணீரும் என்குஞ்சழுத கண்ணீரும்
வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கா; கால்கழுவி
குண்டு நிறைந்து குதிரை குளிப்பாட்டி
இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி
மஞ்சலுக்குப் பாய்ஞ்சு மறித்து தாம் கண்ணீரோ.
04.OONJAT PAADAL - ஊஞ்சற் பாடல்
தந்தான தனாதன தனாதன தனானே
தானா தானாதந்த னாதந்த னானே
வாருமடி தோழியரே நாங்களிரு பேரும்
வந்த சிவராத்திரியை சிந்தையுடன் நோற்போம்
கடற்கரையில் மணற்பரவி நடக்க முடியாது
கானலிலும் வெயிலிலும் ஒட முடியாது
கஞ்சாற் புளியிலே ஊஞ்சாலுங் கட்டி
கனகனா தெருவிலே கூத்துமென்றாடி
காவோலை சரசரக்க வண்டென் றிருந்தேன்
காக்கொத்து மச்சாளைப் பெண்டென் றிருந்தேன்
ஓடோடு புளியம்பழம் உடைந்துடைந்து விழுவானேன்
ஒரு கிண்ணச் சந்தனம் ஒழுகொழுகப் பூசுவானேன்
கண்டபிணி கொண்டவலி கால்மாறி ஓட
கண்ட சிவராத்திரியை காதலுடன் நோற்பாய்
ஏறுமயி லேறிவிளை யாடிமலை தோழி
இரணியனைக் கொன்றமலை nதரியுதடி தோழி
வுளையாட வெகுதுயரம் வருகுதடி தோழி
மெதுவாக ஊஞ்சலைத் தணியுமடி தோழி
05.KOLAADDAM – கோலாட்டம்
தினதந்தினா தினதந்தினா
தினதந்தினா தினனா
தினதந்தினா தினனா
தின்னா தினா தந்தினா
தின தந்தினா தினனா
பன்னிரண்டு கயிர்போட்டு
பள்ளிப் பிள்ளையாட
பள்ளிப் பிள்ளையா
பாங்கான பாடல்களும்
பக்கத்திலே பாட
ஆண் பிள்ளையும் பெண்பிள்ளையும்
அருகில் நின்று பார்க்க
அருகில் நின்று பார்க்க
சிவன் என்று சொல்லி
அனைவருமே சொல்வார்.
பூமணக்கும் பெண்மணிகள்
போற்றி வந்து சூழ
போற்றி வந்து சூழ
பொன்னொழுக நன்னயத்தில்
நன்னயமா தாயே.
06.KUMMI – கும்மி
தன்னானே நாதினம் தன்னானே – தன
தன்னை நாதினம் தன்னானே.
தன்னானே என்றுமே சொல்லுங்கடி – ஒங்க
நாவுக்கு சக்கரை நான் தாரேன்
தில்லாலே என்றுமே சொல்லுங்கடி
திங்கச் சக்கரை நான் தாரேன்.
கடகடன்னு மழை பேய
கம்பிள தண்ணி அலைமோத
காரியகாரராம் நம்மய்யா கங்காணி
கடுக்கன் மின்னலைப் பாருங்கடி.
குதிர வாரதப் பாருங்கடி – ஐயா
குவிஞ்சு வாரதப் பாருங்கடி
குதிரமேல நம்மய்யா கங்காணி
குனிஞ்சு சம்பளம் கேளுங்கடி.
நன்னயமாகவே கொண்டை கட்டி
நாகூறு லேஞ்சி மேலேகட்டி
கண்ணியமாகவே வாராரு – ஐயா
காசு பணமள்ளித் தருவாரு.